எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணை - 6 மாதங்களில் வழக்குகளை விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்க ஏதுவாக மாவட்ட முதன்மை நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள பிற மாவட்ட எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்கள் விசாரிக்கும் எனவும், இந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களை அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களுக்கு அனுப்பவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, மாவட்ட முதன்மை நீதிமன்றங்களை, சிறப்பு நீதிமன்றங்களாக அறிவித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றங்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை தினம்தோறும் விசாரித்து 6 மாதத்தில் முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விவரங்களை, மாவட்ட முதன்மை நீதிபதிகள், மாதந்தோறும் அறிக்கையாக உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story