"தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வுக் காணாவிட்டால் - சிறை நிரப்பும் போராட்டத்தில் இறங்குவோம்"

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு பேச்சு
தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வுக் காணாவிட்டால் - சிறை நிரப்பும் போராட்டத்தில் இறங்குவோம்
x
தண்ணீர் பிரச்சினையை தீர்க்க, தமிழக அரசை வலியுறுத்தி, தி.மு.க. சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பூர் பேரக்ஸ் ரோடு , கே.எம். கார்டன் பகுதியில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தண்ணீர் பிரச்சினைக்கு, தமிழக  அரசு உரிய தீர்வு காணாவிட்டால், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியதை போல, சிறை நிரப்பும் போராட்டத்தில் இறங்குவோம் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்