சமுதாய கூடத்தில் குற்றவாளிகளை தங்கவைக்க எதிர்ப்பு - போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

குற்றவாளிகளை சமுதாய கூடத்தில் தங்கவைக்க எதிர்ப்பு தெரிவித்து சமுதாய கூடத்தை முற்றுகையிட்ட மக்கள்.
சமுதாய கூடத்தில் குற்றவாளிகளை தங்கவைக்க எதிர்ப்பு - போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
x
சென்னை சேப்பாக்கம் பகுதியில் மதுபோதையில் கிடப்பவர்களையும், குற்றவாளிகளையும் லாக் நகர் குடியிருப்பில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில் போலீசார் தங்க வைப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சுமார் ஐநூறு பேர் நள்ளிரவில் சமுதாய கூடத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த நபர்களை போலீசார் மாற்று இடத்துக்கு அழைத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்