பாலாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு : கிராம மக்கள் போராட்டம்
ஜேசிபி இயந்திரம் சிறைபிடிப்பு
வேலூர் அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.வி.குப்பத்தை அடுத்த கவசம்பட்டு பாலாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க ஜேசிபி மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை அறிந்து அங்கு திரண்ட கிராம மக்கள் ஜேசிபியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்த அங்கு சென்ற பொதுப்பணித்துறையினர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களுடன் பேசிய சமரச பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
Next Story