கட்டட வரன்முறை திட்டம் நீட்டிப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு

விதி மீறல் கட்டடங்களை, வரன்முறைப் படுத்துவதற்கான கால அவகாசத்தை, மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கட்டட வரன்முறை திட்டம் நீட்டிப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
x
தமிழகத்தில் விதிமீறல் கட்டடங்களை வரன்முரை படுத்துவதற்காக, நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்படி 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டமானது கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வந்தது. இதற்கான கால அவகாசம் தொடர்ந்து 4 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 5 வதுமுறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 4 வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த ஜூன் 21 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மேலும் ஆறுமாத காலத்திற்கு கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆறு மாதத்தில் விதி மீறிய கட்டடங்களை வரன்முறை படுத்த விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்