திருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு
திருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.
தந்தையை பிரிந்து வாழும் 18 வயது பெண் ஒருவர், திருமணம் ஆகாத தனக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி, தந்தைக்கு உத்தரவிடக் கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த பெண் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 18 வயது கடந்த திருமணம் ஆகாத பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது எனக் கூறினார்.
Next Story