காவிரி விவகாரம் : "கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்" - ராமதாஸ்
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். தமிழகத்துக்கு, ஜூன் மாதத்திற்கு உரிய நீரை திறந்து விடாமல், கர்நாடக அரசு அங்குள்ள ஏரி, குளங்களுக்கு நீரைத் திருப்பி, சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின், இந்த செயலை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ராமதாஸ், வலியுறுத்தி உள்ளார்.
Next Story