வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் - இருவர் கைது...

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த மேலும் இருவர் கைது.
வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் - இருவர் கைது...
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கோட்டையூர் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகள்  தயாரிக்கப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது  நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்காக மருந்து சப்ளை செய்த உசிலம்பட்டியை சார்ந்த சுப்பிரமணியன் மற்றும் திண்டுக்கல்லை சார்ந்த நிகில் ஆகிய 2 பேரை வத்திராயிருப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்