இருசக்கர வாகனம் மோதி பெண் பலி - சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது

கமுதி அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் உயிர்ழந்ததால் சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது செய்யபட்டுள்ளார்.
இருசக்கர வாகனம் மோதி பெண் பலி - சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது
x
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே,  இருசக்கர வாகனம் மோதி பெண் உயிர்ழந்ததால், சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது செய்யபட்டுள்ளார்.  விருதுநகர் மாவட்டம் கீழ்குடியைச் சேர்ந்த பொம்மையாவும், அவரின் மனைவி வீரமாச்சியும் இருசக்கர வாகனத்தில் கமுதி அருகே சென்றுகொண்டிந்தனர். அப்போது, வாலிநோக்கத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் ரவிச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் வந்து மோதியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே வீரமாச்சி பலியானதை அடுத்து,  அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து பெருநாழி காவல் ஆய்வாளர் வந்த வாகனத்தின் கண்ணாடியை மக்கள் அடித்து நொறுக்கின. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிரப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரனை கைது செய்தனர். இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்