மீனாட்சி அம்மன் கோயிலில் ஆபத்தான நிலையில் இரும்பு கதவு - கடந்து செல்ல அச்சப்படும் பக்தர்கள்

மீனாட்சி அம்மன் கோயிலில் ஆபத்தான நிலையில் இரும்பு கதவு கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோயிலில் ஆபத்தான நிலையில் இரும்பு கதவு - கடந்து செல்ல அச்சப்படும் பக்தர்கள்
x
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே துர்க்கை சன்னதியிலிருந்து கல்யாணசுந்தரர் சன்னதிக்கும், மண்டபத்திற்கும் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கதவு கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு சுவற்றிலிருந்து பெயர்ந்து பிடிமான கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லவே பக்தர்கள் அச்சப்படும் நிலை நிலவுகிறது. இது குறித்து புகார் அளித்தும் சரிசெய்யப்படாமல் உள்ளதாக இருப்பதாக குற்றம்சாட்டும் பக்தர்கள், கோயில் நிர்வாகம் விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்