கும்பகோணம் : இரண்டாவது திருமணம் செய்த ராணுவ வீரர் கைது

கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த சுபாஸ் சந்திரபோஸ் என்பவர் ராணுவத்தில் ஹவில்தாராக பணிபுரிந்து வருகிறார்.
கும்பகோணம் : இரண்டாவது திருமணம் செய்த ராணுவ வீரர் கைது
x
கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த சுபாஸ் சந்திரபோஸ் என்பவர் ராணுவத்தில் ஹவில்தாராக பணிபுரிந்து வருகிறார். நாசிக்கை சேர்ந்த ஸ்டெல்லா மேரி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 22 வயதிலும், 16 வயதிலும் மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இரண்டாவதாக மதுரையை சேர்ந்த நித்தியா என்பவரை சுவாமிமலை கோயிலில் திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் முதல் மனைவி ஸ்டெல்லாவுக்கு தெரிந்ததும் அவர் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சுபாஷ் சந்திரபோஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குபதிந்து அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்