பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து - 4 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து - 4 பேர் பலி
x
இந்த விபத்தில் இரண்டு பேர் பலத்த காயங்களுடனும் , 7 பேர் லேசான காயங்களுடனும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். தகவறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ள நிலையில்,  ஆபத்து நிறைந்த பட்டாசு ஆலைக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்