2021க்குள் விண்ணில் மனிதன் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

2021 ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்ப தேவையான பணிகள் நடந்துவருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
2021க்குள் விண்ணில் மனிதன் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
x
2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்ப தேவையான பணிகள் நடந்துவருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையத்தில், விண்வெளிகளில் இருந்து வரும் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் மையம் ஒன்றை இஸ்ரோ தலைவர் சிவன் திறந்துவைத்தார். அதை தொடர்ந்து  தகவல் பெறுவதற்கான டவர் அமைக்கவும் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், 2021 டிசம்பரில் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் பணிகள் நிறைவடையும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்