போனஸ் தொகை வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...

குன்னூர் அருகே போனஸ் தொகை வழங்க வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போனஸ் தொகை வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...
x
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே போனஸ் தொகை வழங்க வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல்  பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2  ஆண்டிற்கான  போனஸ் தொகை வழங்கப்படாததை கண்டித்து, தொழிற் சாலைநுழைவு வாயிலின் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்