ஆசிரியர் நியமன முறைகேடு - உயர் கல்வித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆசியர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் உயர் கல்வித்துறை முதன்மை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.
ஆசிரியர் நியமன முறைகேடு - உயர் கல்வித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு
x
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, இதர கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யும் உத்தரவுக்கு தடைகோரிய வழக்கில், உயர் கல்வித்துறை முதன்மை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆசியர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உயர் கல்வித்துறை முதன்மை செயலர், கல்லூரி கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர், நிர்வாக சீர்திருத்த ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 22க்கு ஒத்திவைத்தனர் .

Next Story

மேலும் செய்திகள்