எடப்பாடி வாரச்சந்தை கடைகளில் பிளாஸ்டிக் பறிமுதல்...

சேலம் மாவட்டம், எடப்பாடியில் புதன்கிழமை வாரச்சந்தையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதாக நகராட்சிக்கு புகார் சென்றது.
எடப்பாடி வாரச்சந்தை கடைகளில் பிளாஸ்டிக் பறிமுதல்...
x
சேலம் மாவட்டம், எடப்பாடியில் புதன்கிழமை வாரச்சந்தையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதாக நகராட்சிக்கு புகார் சென்றது. இதனையடுத்து நகராட்சி ஆணையர், பொறியாளர் ஆகியோர் துப்புரவு பணியாளர்களோடு வாரச்சந்தையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த கடைகளில் இருந்து சுமார் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் உபயோகித்த கடைகாரர்களுக்கு அபராதம் விதித்ததில் சுமார் பத்தாயிரம் வசூல் செய்யப்பட்டது. அவர்களிடம் பிளாஸ்டிக் உபயோகிக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
======


Next Story

மேலும் செய்திகள்