"போலீஸ் உதவியுடன் சொத்தை அபகரிக்க முயற்சி" - டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்

கடன் அடமான பிரச்சினையில், மோசடி நபருக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர்கள் தன்னையும், உறவினர்களையும் மிரட்டுவதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார்.
x
கடன் அடமான பிரச்சினையில், மோசடி நபருக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர்கள் தன்னையும், உறவினர்களையும் மிரட்டுவதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார். வியாபார தேவைக்காக ஓய்வு பெற்ற சார் பதிவாளர் வேதராசுவிடம் பூர்வீக சொத்து பத்திரத்தை அடமானம் வைத்து 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும், பணத்தை திருப்பி செலுத்திய பிறகும், பத்திரத்தை தர மறுக்கும் மோசடி நபர், தனது கணவர் தண்டபாணியை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார். வேதராசு மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பத்திரத்தை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் ஜீவஜோதி கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்