மது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...

ஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.
மது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...
x
ஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் சிப்காட் பகுதியில் இயங்கிவரும் லாரி நிறுத்த மையத்தில் மதுபோதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்,   பால சுந்தரம், கோபால கிருஷ்ண‌ன் இடையே கடுமையான மோதல் ஏற்பட்ட நிலையில் சக ஓட்டுநர்கள் அவர்களை தடுத்துள்ளனர். இதையடுத்து கோபால கிருஷ்ண‌ன்  உறங்கி கொண்டிருந்த போது, லாரிக்குள் புகுந்த கோபால கிருஷ்ண‌ன், அவரை இரும்பு கம்பியாலும், தலையில் கல்லை போட்டும் கொடூரமாக கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிசென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கோபால கிருஷ்ண‌னை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்