செங்கம் : நிலுவை தொகையை வேண்டி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முறையாக பணப் பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம் : நிலுவை தொகையை வேண்டி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முறையாக பணப் பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், பால் உற்பத்தியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை பணப்பட்டுவாடா வழங்குவது வழக்கம். இந்நிலையில், இரண்டு மாதத்திற்கான நிலுவை தொகை  வழங்கப்படாததை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள், சங்க கட்டிடத்தின் கதவிற்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்