பிரம்மதேசம்புதூர் : அரசு மதுபான கடை திறக்க எதிர்ப்பு - வட்டாட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூரில் அரசு மதுபான கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரை முற்றுகையிட்டனர்.
பிரம்மதேசம்புதூர் : அரசு மதுபான கடை திறக்க எதிர்ப்பு - வட்டாட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூரில் அரசு மதுபான கடையை திறக்க  எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரை முற்றுகையிட்டனர். பிரம்மதேசம் புதூரில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த காரணத்தால் அரசு மதுபான கடை மூடப்பட்டது. தற்போது மீண்டும் மதுபான கடை திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கிராம மக்கள் அந்தியூர் வட்டாட்சியர் கணேசனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்