பருவ மழை தவறியதாலேயே குடிநீர் தட்டுப்பாடு : வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் வருவாய் துறை அமைச்சர் R.P.உதயக்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் வருவாய் துறை அமைச்சர் R.P.உதயக்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு சார்பில் 262 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, லாரிகள் மூலம் குடிநீரை தங்கு தடையின்றி வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார். குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளை, உடனடியாக ஆராய்ந்து அப்பகுதியில் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story

