எரியும் மெழுகுவர்த்தியுடன் யோகா செய்து உலக சாதனை படைத்த மாணவி

விருதுநகரில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பாதி தண்ணீர் கொண்ட கண்ணாடி டம்ளரில் எரியும் மெழுகுவர்த்தியுடன் 50 வகையான யோகாசனங்கள் செய்து உலக சாதனை புரிந்துள்ளார்.
x
விருதுநகரில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பாதி தண்ணீர் கொண்ட கண்ணாடி டம்ளரில் எரியும் மெழுகுவர்த்தியுடன் 50 வகையான யோகாசனங்கள் செய்து உலக சாதனை புரிந்துள்ளார். விருதுநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி சக்தி ஷிவானி, கடந்த ஆண்டு யோகா மூலம், யுனிவர்செல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். தொடர்ந்து யோகா மீது தணியாத தாகம் கொண்ட மாணவி ஷிவானி, பாதி நீர் நிரப்ப‌ப்பட்ட கண்ணாடி டம்ளரில் எரியும் மெழுகுவர்த்தியுடன் 50 வகையான யோகாசனங்களை செய்து அசத்தினார். இதனை உலக சாதனையாக பதிவு செய்துகொண்ட நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தார், மாணவிக்கு, சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்