சொத்துவரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு : கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துவரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு : கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம்
x
சொத்து வரி உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடந்த போராட்டத்தில், ஏராமானோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவர்கள் முழக்கம் எழுப்பினர். குடிநீர் வழங்குவதை முறைபடுத்த வேண்டும், கழிவு நீர் கால்வாயை தூர்வார வேண்டும், சாலை மற்றும் பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தர வேண்டும் என போராட்டத்தில் தி.மு.கவினர் வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்