திருப்பூரில் 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது : இளைஞர் தலைமறைவு

திருப்பூரில் இளைஞரால் ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
திருப்பூரில் 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது : இளைஞர் தலைமறைவு
x
திருப்பூரில் இளைஞரால் ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு  ஆண் குழந்தை பிறந்துள்ளது. பீகாரை சேர்ந்த 13 வயது சிறுமி திருப்பூரில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார். அதே பகுதியில் தங்கியிருந்த ஒடிசாவை சேர்ந்த அஜித் க்ரஷல் என்ற 26 வயது இளைஞர், அந்த 13 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவானார். அவர் மீது திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்நிலையில் சிறுமிக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில்  ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்