கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் : மகளின் தற்கொலைக்கு நியாயம் கேட்கும் தந்தை

கோவையில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகளின் மரணம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என அவரது தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் : மகளின் தற்கொலைக்கு நியாயம் கேட்கும் தந்தை
x
கோவைப்புதூர் பிரிவு பகுதியை சேர்ந்த கங்காதரனின் மகள் அஸ்வினி கங்கா. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு குனியமுத்தூர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த எந்த தகவலையும் காவல்துறை தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. காதல் பிரச்சினையால் மகள் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை கூறிய நிலையில் அதுகுறித்த எந்த கடிதத்தையும் காவல்துறை தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார் கங்காதரன். தன் மகள் மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்