எம்ஜிஆர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

புதூர் பாண்டியபுரத்தில் திறக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேணடும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எம்ஜிஆர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர் பாண்டியபுரத்தில் திறக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேணடும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ்  சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை கடந்த 2017-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிலையில் பூங்கா திறக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என்றும்,உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்