பூண்டி, புழல், சோழவரம் ஏரிகளை தூர்வார உத்தரவு - விவசாயிகள் வரவேற்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் மற்றும் சோழவரம் ஏரிகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
x
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் மற்றும் சோழவரம் ஏரிகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல்,  ஆகிய ஏரிகள் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் பூண்டி, புழல், சோழவரம் ஏரிகளை முழுவதுமாக தூர்வாரி ஆழப்படுத்த திட்டமிடப்பட்டு அதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி  மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவின் பேரில் 30 ஆண்டுகள் பிறகு முதல் முறையாக இந்த ஏரிகளை தூர்வாரும் பணியை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் முழு கொள்ளளவிலும் தூர்வார முடியாது என்பதால் பகுதி பகுதியாக பணி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்