நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த செலவு, வசந்தகுமாரிடம் வசூலிக்க கோரிய மனு தள்ளுபடி

நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவை, அந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமாரிடம், வசூலிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த செலவு, வசந்தகுமாரிடம் வசூலிக்க கோரிய மனு தள்ளுபடி
x
நாங்குநேரி தொகுதியில், இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவை, அந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமாரிடம், வசூலிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. மதுரையைச் சேர்ந்த கேகே ரமேஷ் தாக்கல் செய்திருந்த மனுவில், ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் தமிழகத்தில், அரசின் பெரும்பாலான துறைகள் கடனில் இயங்கி வருவதாகவும், நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடத்துவது, அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தார். எனவே, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த வசந்தகுமாரிடம் இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

Next Story

மேலும் செய்திகள்