தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பாலியல் கல்வி குறித்து ஆசிரியர்களுக்கு யுனெஸ்கோ மூலம் பயிற்சி அளிக்கப்படும் ஓப்பந்தம் சென்னையில் கையெழுத்தானது. இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 1 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார். பள்ளி வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் அரைமணி நேரம் விளையாடும் வகையில் திட்டம் ஒன்றை தமிழக அரசு வகுத்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பழைய பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்கள், புதிய பஸ் பாஸ் பெறும்வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்