"நெல் ஜெயராமனுக்கு கவுரவம்" - நெல் ஜெயராமன் குடும்பத்தினர் முதலமைச்சரை சந்தித்து நேரில் நன்றி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நெல் ஜெயராமன் குடும்பத்தினர் இன்று சந்தித்தனர்.
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நெல் ஜெயராமன் குடும்பத்தினர் இன்று சந்தித்தனர். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, நெல் ஜெயராமனுக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த பாடத்தை இடம்பெற செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது, அமைச்சர் காமராஜ் உடனிருந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, அவரது அண்ணன் ஞானசேகரன், முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கவே, அவரை சந்திக்க வந்ததாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்