குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - லதா ரஜினிகாந்த்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - லதா ரஜினிகாந்த்
x
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அதனை ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் எனவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கோவை பந்தய சாலை பகுதியில் தயா என்ற குழந்தைகள் அமைதி அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குழந்தைகளை காக்கும் வகையில் குழந்தைகளுக்கான அமைதி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளை பாதுகாப்பது சமுதாய கடமை எனவும், குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வர வேண்டும் எனவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்