தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க 4 ஆண்டுகள் ஆகும் - மருத்துவத்துறை இணை இயக்குனர்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் சஞ்சய்ராய் தலைமையிலான மத்திய குழு ஆய்வு செய்தது.
கடந்த ஜனவரி மாதம் மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் சஞ்சாய்ராய் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது. மருத்துவமனை அமைப்பதற்கு நிதியுதவி செய்யவுள்ள ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளும் ஆய்வில் பங்கேற்றனர். மருத்துவமனை அமையுள்ள இடத்தை சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணி விரைவில் துவங்கும் எனவும், மருத்துவமனையை முழுமையாக கட்டிமுடிக்க 4 ஆண்டுகள் ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story