இளைஞர் சக்தியை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் - ஐ.ஜி. பெரியய்யா

கோவையில், தினத்தந்தி சார்பில் நடைபெற்ற "நீங்களும், ஐ.ஏ.எஸ். ஆகலாம்" கருத்தரங்கு, 'இளைஞர்களின் மனநிலையை ஒருநிலைப்படுத்தும்' என, மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தெரிவித்துள்ளார்.
x
"நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்" என்னும் தலைப்பில் சிறப்பு இலவச கருத்தரங்கம், கோவையில், நடைபெற்றது. தினத்தந்தி நாளிதழ் மற்றும் வெற்றி ஸ்டடி சென்டர் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், காவல்துறை மற்றும் பல்வேறு நிபுணர்கள் கலந்து கொண்டு, விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, 'இது போன்ற நிகழ்ச்சிகள், இளைஞர்களின் எண்ண ஓட்டத்தையும், செல்லும் தடத்தையும் அவர்களின் மன நிலையையும் ஒருநிலை படுத்த உதவியாக இருக்கும் என்றும், தினத்தந்தி நிறுவனத்திற்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்தார். இளைஞர் சக்தியை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும், அவர் கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்