பொறியியல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - கே.பி.அன்பழகன்

பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பில் பங்கேற்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதாக கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
பொறியியல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - கே.பி.அன்பழகன்
x
பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பில் பங்கேற்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். தர்ம‌புரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சான்றிதழ் சரிபார்ப்பதற்காக நேற்றைய தினம் 23 ஆயிரத்து 4 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 18 ஆயிரத்து 756 பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் கலந்துகொண்ட‌தாக தெரிவித்தார். மீதமுள்ள 4 ஆயிரத்து 248 பேருக்காக, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்த அமைச்சர் அன்பழகன், சேவை மையங்களை அணுகி சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்