மக்களின் கருத்தை கேட்காமல் ஒருபோதும் அணுக்கழிவு மையம் அமைக்கப்படாது - கடம்பூர்.ராஜூ
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று கடம்பூர்.ராஜூ கூறினார்.
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.ராஜூ கூறினார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் கருத்தை கேட்காமல் ஒருபோதும் அணுக்கழிவு மையம் அமைக்கப்படாது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன் அடிப்படையிலேயே அணுக்கழிவு மையம் அமைப்பது குறித்த முடிவு எட்டப்படும் என்றும் அமைச்சர ராஜூ கூறினார்.
Next Story