ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய முடிவு...போக்குவரத்து போலீசார் அதிரடி

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
x
சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போக்குவரத்து காவல்துறையின் சார்பில் புதிய இ செலான் மெஷின் வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமலபடுத்தவில்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹெல்மெட் அணியாதவர்களின் ஒட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, அதி நவீன இ-சலான் மிஷின்கள் மூலம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்