குடிநீர் தொட்டியில் கசிவு, தண்ணீர் வரவில்லை என புகார்

சென்னை தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிட்லபாக்கம்- மாடம்பாக்கம் பேரூராட்சிகளில் கூட்டு குடிநீர் திட்டம் அமைச்சர் வேலுமணியால் தொடங்கப்பட்டது.
குடிநீர் தொட்டியில் கசிவு, தண்ணீர் வரவில்லை என புகார்
x
சென்னை தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிட்லபாக்கம்- மாடம்பாக்கம் பேரூராட்சிகளில் கூட்டு குடிநீர் திட்டம் அமைச்சர் வேலுமணியால் தொடங்கப்பட்டது. இந்நிலையில், குடிநீர் தொட்டியில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தண்ணீர் விநியோகிக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, திமுக எம்எல்ஏ ராஜா இதனை நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின்  நிதிகளை முறையாக பயன்படுத்த வில்லை என்று குற்றம்சாட்டியதோடு, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார். குடிநீர் திட்டங்களை அமல்படுத்துவதில் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டு பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்