பிறந்தநாள் கொண்டாடியபோது நண்பர்களுக்கு இடையே தகராறு : இரும்பு சட்டியால் தாக்கியதில் காயம் - சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி

ராமநாதபுரத்தை சேர்ந்த அஜித்குமார் மற்றும் விவேக். நண்பர்களான இருவரும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாடியபோது நண்பர்களுக்கு இடையே தகராறு : இரும்பு சட்டியால் தாக்கியதில் காயம் - சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி
x
ராமநாதபுரத்தை சேர்ந்த அஜித்குமார் மற்றும் விவேக். நண்பர்களான இருவரும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் வந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கள் அறையில் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார் அங்கிருந்த இரும்பு கடாயை எடுத்து விவேக் தலையில் அடித்ததாக தெரிகிறது.  இதில் காயமடைந்த விவேக் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில்,  நேற்று அவர் இறந்து போனார். ஏற்கனவே அஜித்குமாரை கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்