"சாராய ஆலைகளை திமுகவினர் மூட வேண்டும்" - தமிழிசை சவுந்திரராஜன்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தமது 58ஆவது பிறந்தநாளை, தூத்துக்குடியில் இன்று கொண்டாடினார்.
x
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தமது 58ஆவது பிறந்தநாளை, தூத்துக்குடியில் இன்று கொண்டாடினார். குலசேகரப்பட்டினத்தில், இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைப்பதற்காக, சென்னையில் இருந்து சென்றிருந்த அவருக்கு, தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து, விமான நிலையத்திலேயே, தமது பிறந்தநாளை கொண்டாடிய அவர்,  கேக் வெட்டி கட்சியினருக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி திமுக எம்.பி. கனிமொழி, தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்துள்ள நிலையில், திமுகவினர் நடத்தி வரும் சாராய ஆலைகளை உடனே மூட வேண்டும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்