சிறுமுகை வனப்பகுதியில் மான் வேட்டையாடிய இருவர் கைது

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சிறுமுகை வனப்பகுதியில் மான் வேட்டையாடிய இருவர் கைது
x
கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.  வேட்டை தடுப்பு காவலர்கள் பெத்தி குட்டை கருப்பராயன் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேரை தடுத்து நிறுத்தினர். அவர்களில் 3 பேர் தப்பியோடி விட்டனர். மற்ற 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த வனத்துறையினர் இருவரிடமிருந்து 15 கிலோ மான் இறைச்சி, நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து பொருள்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய 3 பேரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்