சேதமடைந்த பாலத்தால் அதிகரிக்கும் விபத்துகள் : பாலத்திற்கு பூஜை செய்து மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சேதமடைந்துள்ள பாலத்திற்கு பூஜை செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேதமடைந்த பாலத்தால் அதிகரிக்கும் விபத்துகள் : பாலத்திற்கு பூஜை செய்து மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சேதமடைந்துள்ள பாலத்திற்கு பூஜை செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாலத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளத்தால் விபத்துகள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பாலத்தின் அருகே தேங்காய் பழம் வைத்து மாலை அணிவித்து பூஜை செய்யும் நூதன போராட்டம் நகர செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் இடையே  பாலம் சரி செய்யப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்