தோஷம் எடுப்பதாக கூறி நகை பறிப்பு : செயினை கழற்றி கொடுத்து ஏமாந்த கல்லூரி மாணவி

சென்னை தாம்பரத்தில் தோஷம் நீக்குவதாக கூறி பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தோஷம் எடுப்பதாக கூறி நகை பறிப்பு : செயினை கழற்றி கொடுத்து ஏமாந்த கல்லூரி மாணவி
x
சென்னை தாம்பரத்தில் தோஷம் நீக்குவதாக கூறி பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தில் உள்ள தனியார் சித்த கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வரும் மதுமதி என்ற மாணவி, கடந்த மாதம் பேருந்திற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், மாணவியின் தந்தை தமது நண்பர் என்று மாணவியிடம் அறிமுகம் செய்துள்ளார். மாணவியும் அதை நம்பி அவரிடம் பேச்சு கொடுக்கவே, அந்த நபர் மாணவிக்கு தோஷம் இருப்பதாக கூறி அதனை நீக்க அருகே உள்ள ராமர் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தங்க செயினை கழற்றி கொடுத்துவிட்டு கோயிலை மூன்று முறை சுற்றிவருமாறு அவர் கேட்க, மாணவியும் செயினை கழற்றி கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த நபர் செயினுடன் மாயமானதை அறிந்த மாணவி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி உதவியுடன் போலீசார் மர்ம நபரை அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் அவர் ஆம்பூரை சேர்ந்த சுரேஷ் குமார் என்பதும், இதுபோல் தோஷம் நீக்குவதாக கூறி பலபேரிடம் அவர்  கைவரிசை காட்டியதும் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்