44-வது மலர் கண்காட்சி தொடக்கம் : கண்காட்சியில் அபிநந்தனின் உருவம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடைவிழாவையொட்டி, 44-வது மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
44-வது மலர் கண்காட்சி தொடக்கம் : கண்காட்சியில் அபிநந்தனின் உருவம்
x
மாவட்ட ஆட்சியர் ரோகிணி ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார். மூன்று தினங்கள் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. அபிநந்தனுடன் மிக் 21 ரக போர் விமானம், மலர்களால் சித்தரிக்கப்பட்ட பென்குயின்,  வரலாற்று சின்னங்களை நினைவூட்டும் மலர் சிற்பங்கள், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நினைவுப்படுத்தும் சிற்பங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. அதேபோல், சேனைகிழங்காலான செங்கோட்டை, பாகற்காய் டைனோசர், கத்தரி காயில் உருவான கடல்கன்னி உள்ளிட்ட சிற்பங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும்  வகையில், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. 



Next Story

மேலும் செய்திகள்