நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது - இந்திய தேர்தல் ஆணையத்தில் தகவல் - சத்யபிரத சாஹூ

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது - இந்திய தேர்தல் ஆணையத்தில் தகவல் - சத்யபிரத சாஹூ
x
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஹெச். வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு  வெற்றி பெற்றார். இதையடுத்து, எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த இடம் காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார். இதையடுத்து, நாங்குநேரி தொகுதி காலியானது குறித்து, சட்டப்பேரவை செயலாளர் அளித்த கடிதத்தை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவிட்டதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்