கனரக வாகனத்தை இயக்கும் வளைகரம்...இந்தியாவை வலம் வரும் சாதனை பெண்மணி

நாட்டின் பல பகுதியில் கனரக லாரியை இயக்கி சேலத்தை சேர்ந்த பெண் ஓட்டுநர் அசத்தி வருகிறார்.
x
நாட்டின் பல பகுதியில் கனரக லாரியை இயக்கி சேலத்தை சேர்ந்த பெண் ஓட்டுநர் அசத்தி வருகிறார். அங்குள்ள ராஜபாளையம் பகுதியை சேர்ந்த செல்லம்மாள், குடும்ப சூழல் காரணமாக லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மகாராஷ்டிரா, மும்பை, காஷ்மீர், உத்தரப்பிரதேசம் என பல மாநிலங்களில் கனரக லாரிகளை ஓட்டி வருகிறார். திருமங்கலம் வந்த சாதனை பெண் செல்லமாள், லாரியை இயக்கி தனது இரு மகன்களையும் பொறியியல் படிப்பில் சேர்த்து படிக்கவைத்ததாக பெருமிதமாக தெரிவிக்கிறார். பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் சவாலுடன் ஒரு பெண்மணி இந்தியா முழுவதும் கனரக வாகனங்களை ஓட்டி தன்னுடைய குடும்பத்தை மேம்படுத்தும் விஷயம், நம் அனைவருக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது. 

Next Story

மேலும் செய்திகள்