பெண் தொழிலதிபரை தாக்கிய நீதிபதி குடும்பத்தினர்...

கோபிசெட்டிபாளையத்தில், நிலப்பிரச்சினை காரணமாக முன்னாள் நீதிபதி குடும்பத்தினர், பெண் தொழிலதிபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் தொழிலதிபரை தாக்கிய நீதிபதி குடும்பத்தினர்...
x
கோபிசெட்டிபாளையத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதி, பெண் தொழிலதிபர் நிர்மலா இடையே நிலப்பிரச்சினை உள்ளது. பிரச்சினைக்குரிய அந்த இடத்தில் பெண் தொழிலதிபர் அத்துமீறி சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருதரப்பினரிடையே எழுந்த கடும் வாக்குவாதம், கை தகராறில் முடிந்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதியின் குடும்பத்தினர், அந்த பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அங்கிருந்து தப்பிச்சென்ற தொழிலதிபர் நிர்மலா, நீதிபதி குடும்பத்தினர் மீது கொலை முயற்சி புகார் அளித்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பிரச்சினைக்குரிய இடத்தில் அந்த பெண் அத்துமீறி நுழைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டதாக, ஓய்வு பெற்ற நீதிபதி பாரதி விளக்கம் அளித்துள்ளார். நில தகராறில் பெண் தொழிலதிபர், நீதிபதி குடும்பத்தினர் தாக்கி கொண்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்