திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் வசந்த உற்சவம்...
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் இளவேனிற் காலத்து வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் இளவேனிற் காலத்து வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. கடந்த 19 ஆம் தேதி துவங்கிய உற்சவத்தை தொடர்ந்து சுவாமி தியாகராஜருக்கு தினமும் அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது. பதினொறாம் நாள் உற்சவமான நேற்று அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி தியாகராஜர் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பின்பு கோவிலை அடைந்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
Next Story