பொறியியல் படிப்பில் சேர 2 நாள் மட்டுமே அவகாசம் - மொத்தம் 1.25 லட்சம் மாணவர்கள் மட்டுமே பதிவு

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இரண்டு நாளில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை ஒன்னேகால் லட்சம் மாணவர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.
பொறியியல் படிப்பில் சேர 2 நாள் மட்டுமே அவகாசம் - மொத்தம் 1.25 லட்சம் மாணவர்கள் மட்டுமே பதிவு
x
பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கடந்த 2 ஆம் தேதி துவங்கியதையடுத்து, சுமார் ஒன்னேகால் லட்சம் மாணவர்கள்,பதிவு செய்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1.75 லட்சம் இடங்கள் இருக்கக் கூடிய நிலையில், 1.25 லட்சம் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.கடந்த ஆண்டு 1.60 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தபோதே,70 ஆயிரம் இடங்கள் மட்டுமே பூர்த்தியாகின. இதனால் கடந்த ஆண்டு ஒரு லட்சம் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருந்தது. இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையே குறைவாக இருப்பதால், காலியிடங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்