டிக் டாக் செயலியில் கலக்கிய சிறுவன் கொடூர கொலை...

நெல்லை மாவட்டத்தில் 9 வயது சிறுவனை, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
x
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ளது குறிச்சிகுளம் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த தளவாய் சரோஜா தம்பதியரின் 9 வயது மகன் கொம்பையா, அங்குள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முடித்து விட்டு நான்காம் வகுப்பு செல்ல இருந்தான். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாடச் சென்றவன், வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவனது பெற்றோரும், உறவினர்களும் தேடி வந்ததுடன், தாழையூத்து காவல் நிலையத்திலும் சிறுவனை காணவில்லை என புகார் அளித்தனர்.

சிறுவனை தேடும் பணியில் இறங்கிய போலீசார், 28 ஆம் தேதி காலை, அந்த கிராமத்துக்கு அருகே, நான்கு வழிச் சாலையை ஒட்டிய  முட்புதரில் இருந்து சிறுவனை சடலமாக மீட்டனர். சிறுவன் தலையில், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட காயம் இருந்ததால், சம்பவத்தன்று இறுதியாக சிறுவன் யாருடன் சென்றான் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், சிறுவன் கொம்பையா, டிக் டாக் செயலி, பப்ஜி விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டி அப்பகுதி இளைஞர்களுடன் அதிக நேரம் செலவிட்டதும், அவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. 

அதனையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார்,  அதே கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டி என்கிற இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாயாண்டி, அந்த சிறுவனுடன் செல்போனை காட்டி அதிக நேரம் செலவிட்டதும், பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியதும் தெரியவந்தது. பாலியல் ரீதியாக துன்புறுத்திய செயலை வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அந்த சிறுவனை கல்லால் தாக்கி கொலை செய்ததாக மாயாண்டி, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட மாயாண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், செல்போனை காட்டி, பாலியல் ரீதியாக  துன்புறுத்தி 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்