ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்

அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்
ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில்,ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இதனையடுத்து 5 நாள் காவலில் அவரை விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு,நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் மீண்டும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது, நந்தகுமாரை வரும் ஜூன் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்